பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், பிப். 19, 2020

செய்திகள் - படங்களில்

News image
Updated On :20 பிப்ரவரி 2020, 9:00 am

DIN

புது தில்லியில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்திவரும் ஷாகீன் பாக்கிற்குப் புதன்கிழமை வந்த உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள சமாதானப் பேச்சாளர்கள் சஞ்சய் ஹெக்டே மற்றும் சாதனா ராமச்சந்திரன்.

Story image

சமாதானப் பேச்சுவார்த்தையின்போது கவனிக்கும் போராட்டக்காரர்கள்.

Story image

குஜராத்தில் ஆமதாபாத் நகரில் சர்தார் வல்லபபாய் படேல் பன்னாட்டு விமான நிலையத்துக்கு அருகேயுள்ள குடிசைப் பகுதிகளுக்கு மேலே பறந்துசெல்கிறது வாகனங்கள் மற்றும் பொருள்களை ஏற்றிவந்த அமெரிக்க சரக்கு விமானம்.  வரும் 24, 25 தேதிகளில் இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்களில் படக்கூடாது என்பதற்காக அவர் செல்லும் வழிகளில் இருக்கும் குடிசைப் பகுதிகளை மறைத்து சுவர்கள் எழுப்பப்படுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.

Story image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருவதையொட்டி, ஆக்ராவில் தாஜ் மஹால் அருகே யமுனை ஆற்றங்கரையோரத்தில்  சேறு, கழிவு மண்ணை அப்புறப்படுத்தும் பணியில் மண் அள்ளும் எந்திரங்கள்.

Story image

மகாராஷ்டிரத்தில் சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாளையொட்டி, தாதரிலுள்ள சிவாஜி பூங்காவில் சிவாஜியின் சிலைக்கு மலர் மரியாதை செலுத்துகிறார்கள் மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி மற்றும் மும்பை மேயர் கிஷோரி பெட்நெகர்.

Story image

ஹிமாச்சலப் பிரதேசத்தில் கின்னார் மாவட்டம் சௌரா பகுதியில் காட்டுப் பகுதியில் பற்றியெரிந்துகொண்டிருக்கும் வனத் தீ.

Story image

இலங்கையில் கொழும்பு நகரில் கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்ட ஒரே சீனரான லுவோ யான், குணமடைந்த பின், தேசிய தொற்றுநோய்கள் மருத்துவமனையின் தனியறையிலிருந்து மகிழ்ச்சியாக அனைவரிடமிருந்தும் விடைபெற்று வெளியே செல்கிறார். 

Story image

பாகிஸ்தானில் கராச்சி நகரில் விஷவாயு கசிவு காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்ட பெண்ணை மருத்துமனைக்குக் கொண்டு செல்லும் உறவினர்கள். துறைமுக நகரான கராச்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவில் நேரிட்ட விஷவாயு கசிவு காரணமாக 5 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் உடல் நலம் குன்றினர். இன்னமும் பலருக்கு சுவாசப் பிரச்சினை தொடருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.