புது தில்லி: மெர்ஸிடஸ் பென்ஸ் முற்றிலும் புதிதான ஜிஎல்இ எஸ்யுவி காரை இந்தியாவில் புதன்கிழமை அறிமுகம் செய்துள்ளது.
புது தில்லியில் நடந்த நிகழ்ச்சியில் புதிய காரை மெர்ஸிடஸ் பென்ஸ் மேலாண் இயக்குநர் மார்ட்டின் ஷ்வெங்க் (வலது), துணைத் தலைவர் (விற்பனை-சந்தை) சந்தோஷ் ஐயர் ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.
இந்த காரின் விலை 73.70 லட்சத்தில் தொடங்குகிறது. கூடுதல் வசதிகளுடன் கூடிய காரின் அதிகபட்ச விலை ரூ. 1.25 கோடி.
நாலாவது தலைமுறை காரான மெர்ஸிடஸ் - பென்ஸ் ஜிஎல்இ எஸ்யுவி, 2018 அக்டோபரிலேயே பாரிஸ் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டது. எனினும், நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்போதுதான் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.