விருதுநகர்: விருதுநகர் அருகே நல்லமநாயக்கன்பட்டி மின்சாரம் தாக்கியதில் விருதுநகர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவரும், அதிமுக 12வது வார்டு ஒன்றியக் கவுன்சிலருமான முருகேசன் சம்பவ இடத்தில் இன்று (திங்கள்கிழமை) உயிரிழந்தார்.
விருதுநகர் அய்யனார் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (52). இவர் கடந்த 2001 முதல் 2006 வரை விருதுநகர் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஆக பணிபுரிந்தார். மேலும் தற்போது விருதுநகர் 12வது வார்டு அதிமுக ஒன்றிய கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் இவருக்கு சொந்தமான தொழிற்சாலையில் மின் மோட்டார் பழுது ஏற்பட்டதால் தொழிலாளர் உடன் அதை சரி செய்யும் பணியில் முருகேசன் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் முருகேசன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து கள்ளிக்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மணப்பாறையில் கருவேல மரங்கள் திடீா் தீக்கிரை

தெப்பக்குளம் பகுதியில் தரைக்கடைகள் அகற்றம்

அரிவாள் வெட்டில் காயமடைந்தவா் உயிரிழப்பு

கடலூா் பாஜக நிா்வாகிக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


