சீர்காழி: சீர்காழி அருகே வேளாண்மை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் பருத்திக்கு உரிய விலை கொடுக்காததால் விவசாயிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே, எருக்கூரில் நாகப்பட்டினம் வேளாண்மை விற்பனைத் துறை விற்பனைக் குழு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் உள்ளது. இங்கு நாகை, கடலூர், பண்ரூட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விவசாயிகள் உற்பத்திச் செய்த பருத்தியை வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் கொண்டு வந்து பருத்தி ஏலம் விடப்படுகிறது. இங்கு திங்கள்கிழமை விவசாயிகள் கொண்டு வந்த பருத்தி மூட்டைகள் வியாபாரிகள் வராததால் ஏலம் நிறுத்தி வைக்கப்பட்டு இன்று (செவ்வாய்கிழமை) ஏலம் விடப்பட்டது.
விவசாயிகள் கொண்டு வந்த பருத்தி மூட்டைகளில், 50 சதவிகிதத்துக்கு மேல் தரமான பருத்தியாக தேர்வு செய்யப்பட்டு ஒரு குவிண்டால் ரூ. 5,550க்கு அரசு விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது. மீதமுள்ள பருத்தி, வியாபாரிகளால் ஒரு குவிண்டால் ரூ. 3,800 வீதம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து கொள்வதாக அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டு அதற்குரிய பட்டியல் ஒட்டப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கொண்டு வந்த பருத்தி தரமாக இருந்தும் குவிண்டால் ரூ. 3,800 வீதம் கொள்முதல் செய்து கொள்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில் விவசாயிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எருக்கூரில் சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பருத்தி மூட்டைகளை சாலையின் குறுக்கே போட்டு இன்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த கொள்ளிடம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களில் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் பருத்தி கொள்முதல் செய்வதில் விவசாயிகளிடத்தில் எந்த பாரபட்சமும் இன்றி பருத்தி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதைத் தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் ‘சைவ திணிப்பு’: பாஜக அரசு மீது திரிணமூல் குற்றச்சாட்டு
‘இணையவழி குற்ற வழக்குகளில் விரைவான நடவடிக்கை’

ஆமைகள் மூலம் பண்டைய கடல் வழித்தடங்களை கண்டறியலாம்: வனத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாகு

சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: சென்னைக்கு மாற்றி உத்தரவு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



