தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், மார்ச் 18, 2020

செய்திகள் - படங்களில்

News image
Updated On :19 மார்ச் 2020, 12:59 pm

DIN

வாராணசியில் மக்கள் வருகையில்லாத நிலையில் கங்கையில் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ள படகுகள்.

Story image

கரோனா அச்சம் காரணமாக மும்பையில் வழிபாட்டுக்கு மூடப்பட்டுவிட்ட நிலையில் புனித மிக்கேல் தேவாலயத்தின் மூடப்பட்ட கதவுகளின் முன் வழிபடும் மக்கள்.

Story image

இராக்கில் தலைநகர் பாக்தாத்தில் ஆளில்லாமல் வெறிச்சோடிக் கிடக்கும் திக்ரிஸ் ஆற்றுப் பாலத்தைக் கடந்து செல்கிறார் ஒருவர். கரோனா வைரஸ் பரலவலைத் தடுக்க இராக் அரசு ஒரு வார கால ஊரடங்கை அறிவித்துள்ளது.

Story image

பிலிப்பின்ஸின் தலைநகர் மணிலாவில் பன்னாட்டு விமான நிலையத்தில் கரோனாவுக்கு அஞ்சி பிளாஸ்டிக் பைகளால் தற்காத்துக் கொண்டு புறப்பட்டுச் செல்லும் சீனக் குடும்பத்தினர். ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்துக்குள் நாட்டின் பிரதான வடக்குப் பிராந்தியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று விதித்த காலக்கெடுவை பிலிப்பின்ஸ் அரசு விலக்கிக் கொண்டுள்ளது.

Story image

போக்குவரத்து ஏதுமின்றி வெறிச்சோடிக் கிடக்கிறது சிங்கப்பூருடன் மலேசியாவை இணைக்கும் சிங்கப்பூர் பெருவழி (இடம்: ஜோகர் பஹ்ரூ, மலேசியா). தற்காப்பு நடவடிக்கையாக மார்ச் 18 முதல் மக்கள் வந்துசெல்வதைத் தடுக்கும் வகையில் தன்னுடைய எல்லைகளை மலேசிய அரசு மூடிவிட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.