பேசும் படங்கள் : செய்திகள் - படங்களில்

செய்திகள் - படங்களில்
பேசும் படங்கள் : செய்திகள் - படங்களில்

ஒருவருக்கு ஒருவர் உதவி: சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக சிறப்பு ரயிலைப் பிடிக்க சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி மாற்றுத் திறனாளிகளான இருவரில் ஒருவர் தள்ளுவண்டியில் அமர்ந்திருக்க கயறு கட்டி இழுத்துச் செல்கிறார் மற்றொருவர்.

தில்லியிலிருந்து உத்தரப் பிரதேசத்திலுள்ள சொந்த ஊருக்குத் திரும்ப  நடந்து சென்றுகொண்டிருந்த  நிலையில் இரு மாநில எல்லையில் காவல்துறையினரால் தடுத்துநிறுத்தப்பட்டதால்  கலங்கி நிற்கிறார் புலம்பெய ர் தொழிலாளியான லங்கூலா என்ற பெண்.

ஊர் நோக்கி: மகாராஷ்டிரத்தில் தாணே நகரில் மஜிவாடா சந்திப்பில் செவ்வாய்க்கிழமை தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காகக் காத்திருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களும் அவர்களுடைய குடும்பங்களும்.

இடைவெளியில்லை: பஞ்சாபில் அமிர்தசரஸ் நகரில் உத்தரப் பிரதேசத்திலுள்ள தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக செவ்வாய்க்கிழமை ரயிலேறும் முன் மருத்துவ பரிசோதனைக்காகத் திரண்டுநிற்கும் புலம்பெயர் தொழிலாளர்கள், சமூக இடைவெளி பற்றிய எவ்வித அக்கறையுமின்றி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com