சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

பெங்களூரில் 4 ஆயிரத்தை நெருங்கும் கரோனா பலி

பெங்களூரு மாவட்டத்தில் மட்டும் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு பலியானோர் எண்ணிக்கை 3,997 ஆக உயர்ந்துள்ளது.

News image

கேரளத்தில் மேலும் 5,537 பேருக்கு கரோனா தொற்று

Updated On :14 நவம்பர் 2020, 7:06 pm

பெங்களூரு மாவட்டத்தில் மட்டும் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு பலியானோர் எண்ணிக்கை 3,997 ஆக உயர்ந்துள்ளது.

கர்நாடக மாநில சுகாதரத்துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி,

இன்று மாநிலம் முழுவதும் புதிதாக 2,154 பேருக்கும், பெங்களூரில் புதிதாக 1,195 பேருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மாநிலத்தின் மொத்த பாதிப்பு 8,60,082 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மாநிலம் முழுவதும் 17 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் பெங்களூரில் மட்டும் 9 பேர் பலியானதால் மொத்த பலியின் எண்ணிக்கை 3,997 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலம் முழுவதும் இன்று ஒரே நாளில் 2,198 பேர் தொற்றில் இருந்து குணமடைந்ததை அடுத்து மொத்தம் எண்ணிக்கை 8,20,590 ஆக உள்ளது. தற்போது 27,965 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.