கேரளத்தில் கரோனாவிலிருந்து மீண்டவர், இதய, சிறுநீரகப் பிரச்சினையால் பலி

கேரளத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியவர், சிறுநீரக, இதய நோய் காரணமாக உயிரிழந்தார்.
கேரளத்தில் கரோனாவிலிருந்து மீண்டவர், இதய, சிறுநீரகப் பிரச்சினையால்  பலி
Updated on
1 min read

கேரளத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய முதியவர், சிறுநீரக, இதய நோய் காரணமாக உயிரிழந்தார்.

மலப்புரத்தைச் சேர்ந்த 85 வயதான இவர், கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். ஏப். 7, 10, 13 ஆகிய நாள்களில் எடுக்கப்பட்ட சோதனைகளில் தொற்று விலகியதாக உறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார்.

நீரழிவு பாதிப்புள்ள இவர், இதய நோய், சிறுநீரகப் பிரச்சினைகளிலும் அவதிப்பட்டு வந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அதிகாலை இறந்தார்.

இவருடைய மரணத்துக்கு கரோனா காரணமல்ல என்று தெரிவித்துள்ள அரசு மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் கண்காணிப்பாளர்  கே.வி. நந்தகுமார், இது வழக்கமான மரணம்தான் என்றார்.

மேலும், இவருடைய இறுதிச் சடங்குகள் கரோனா நோயாளிகளுக்குரிய நடைமுறைகளின்படி நடைபெறாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com