விழுப்புரம் அருகே நெடுஞ்சாலையில் பற்றியெரிந்த கார்!

விழுப்புரம் அருகே நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு கார் தீப்பற்றியெரிந்தது.
விழுப்புரம் அருகே நெடுஞ்சாலையில் பற்றியெரிந்த கார்!

விழுப்புரம் அருகே நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு கார் தீப்பற்றியெரிந்தது.

விழுப்புரம் - திருச்சி  தேசிய நெடுஞ்சாலையில், அரசூர் அருகே இருவேல்பட்டு பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு ஒரு கார் தீப்பிடித்தது.

தீப்பற்றியதை உடனே கவனித்த ஓட்டுநர் விக்ரம், கீழே இறங்கியோடித் தப்பிவிட்டார்.

விழுப்புரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

விழுப்புரத்திலிருந்து காரை சர்வீஸ் செய்து எடுத்துக்கொண்டு சொந்த ஊரான கூவாகம் கிராமத்துக்கு ஓட்டுநர் விக்ரம் சென்றபோது இந்த தீ விபத்து நேரிட்டுள்ளது.

தீப்பற்றியதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com