குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஒடிசாவில் அதிகரிக்கும் கரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 8,681 பேருக்கு தொற்று; 14 பேர் பலி

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 8,681 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 4,679 பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 8:14 am

DIN


புவனேஸ்வர்: ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 8,681 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 4,679 பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர் மற்றும் தொற்று பாதித்த 14 பேர் உயிரிழந்துள்ளதாக வெள்ளிக்கிழமை மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 8,681 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் சேர்த்து இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்தம் எண்ணிக்கை 4,44,194 -ஆக அதிகரித்துள்ளது. அதே வேளையில் தொற்றிலிருந்து 3,80,400 பேர் மீட்கப்பட்டுள்ளனர், சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 61,698 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில், தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் இருந்து  4,948 பேருக்கும், ஊள்ளூரில் தொடர்பில் இருந்தவர்களிடம் இருந்து 3,733 பேருக்கு தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. 

மாநிலத்தில் ஏப். 29 வரை 1,00,86,656 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 

இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் பணிபுரியும் கரோனா சுகாதாரப் பணியாளர்கள், நிபுணர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என ஒடிசா அரசு வியாழக்கிழமை அறிவித்தது. 

இதற்கிடையில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஏப்ரல் 25 ஆம் தேதி கரோனா தொற்றுக்கு எதிராக 18 முதல் 44 வயதுக்குள்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி போடப்படும் என அறிவித்தார்.

இந்த தடுப்பூசிக்காக மாநில அரசு ரூ.2,000 கோடி செலவிடுவதாக மாநில முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.