எனவே நிகழாண்டில் கரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில், அரசு விதிமுறைகளை பின்பற்றும் நோக்கத்திலும் கோயிலில் தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது. ஆனாலும், இதையும் மீறி ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசை நாள் என்பதால், அதற்கு முதல் நாளான சனிக்கிழமை இரவு ஆந்திரம், கர்நாடகம், கேரளம் மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக கோயில் வளாகம் முன்புறம், குளக்கரை சாலை, பஜார் பகுதி, காய்கறி சந்தை மற்றும் காக்களூர் ஏரிச்சாலை மற்றும் நடைபாதையிலும் இருபுறமும் பக்தர்கள் குவிந்தனர்.