47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சசிகலா விடுதலையைக் கொண்டாடும் விதமாக ஜெ. நினைவிடம் திறப்பு: தினகரன்

சசிகலா விடுதலையைக் கொண்டாடும் விதமாக தமிழகத்தில் ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்டுள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

News image
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் (கோப்புப்படம்)
Updated On :27 ஜனவரி 2021, 8:03 am

DIN


சசிகலா விடுதலையைக் கொண்டாடும் விதமாக தமிழகத்தில் ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்டுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று பெங்களூரு - பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா இன்று (ஜன.27) விடுதலை செய்யப்பட்டார்.

அவரைக் காணச் சென்ற டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, சசிகலாவை வேறு மருத்துவமனைக்கு மாற்றுவது குறித்து மருத்துவர்கள் ஆலோசனை பெற்று முடிவு செய்யப்படும்.

நிர்வாகிகள், தொண்டர்கள் சசிகலா வருகைக்காக காத்திருக்கின்றனர். அவரது வரவேற்பு தமிழகத்தில் சிறப்பானதாக இருக்கும் என்று கூறினார்.

ஜெயலலிதா நினைவிடத் திறப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், சசிகலாவின் விடுதலையை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

அதிமுக - அமமுக இணையுமா என்ற கேள்விக்கு அரசியல் பேச விரும்பவில்லை என்றும், சசிகலா விடுதலையான மகிழ்ச்சியில் தற்போது இருப்பதாகவும் தினகரன் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.