ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வேதா நினைவு இல்லம்: திறந்து வைத்தார் முதல்வர்

ஜெயலலிதா வாழ்ந்த வேதா நினைவு இல்லத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

News image
நினைவில்லத் திறப்பு
Updated On :28 ஜனவரி 2021, 9:50 am

DIN

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நினைவு இல்லத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று (ஜன.28) திறந்து வைத்தார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில் வேதா நினைவு இல்லத்தை ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கு ஏற்றியும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். 

மெரீனாவில் ஜெயலலிதா நினைவிடத்தை நேற்று (ஜன. 27) திறந்து வைத்த நிலையில், இன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வேதா நினைவு இல்லத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

வேதா இல்லத்தின் பெயர் பலகையையும், நினைவு இல்ல  கல்வெட்டினையும்  முதல்வர் பழனிசாமி மக்கள் பார்வைக்காக திறந்து வைத்து, ரிப்பன் வெட்டி வேதா நினைவு இல்லத்தினுள் சென்றார்.

ரிப்பன் வெட்டி வேதா இல்லத்தினுள் நுழையும் முதல்வர் உள்ளிட்டோர்..

ரிப்பன் வெட்டி வேதா இல்லத்தினுள் நுழையும் முதல்வர் உள்ளிட்டோர்..

இல்லத்தினுள் சென்ற முதல்வர் பழனிசாமி வரவேற்பரையில் இருந்த குத்து விளக்கை ஏற்றினார். அதனைத் தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் குத்துவிளக்கு ஏற்றி நினைவு இல்லத்தை பார்வையிட்டனர்.

வேதா நினைவு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.