ஈரோட்டில் கரோனாவில் மறைந்த பத்திரிகையாளர் படத்திறப்பு

கரோனா தொற்றால் உயிரிழந்த ஈரோட்டை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ராஜேந்திரனுக்கு நினைவஞ்சலி மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
கரோனாவில் மறைந்த பத்திரிகையாளர் ராஜேந்திரன் உருவப் படத்தினை திறந்து வைத்து நினைவஞ்சலி செலுத்திய தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சா் சு.முத்துசாமி.
கரோனாவில் மறைந்த பத்திரிகையாளர் ராஜேந்திரன் உருவப் படத்தினை திறந்து வைத்து நினைவஞ்சலி செலுத்திய தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சா் சு.முத்துசாமி.
Published on
Updated on
1 min read


ஈரோடு: கரோனா தொற்றால் உயிரிழந்த ஈரோட்டை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ராஜேந்திரனுக்கு நினைவஞ்சலி மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சா் சு.முத்துசாமி பங்கேற்று ராஜேந்திரன் உருவப் படத்தினை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஈரோடு எம்.பி. அ.கணேசமூர்த்தி, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி சிவகுமார், திமுக துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் மேயர் குமார் முருகேஷ், அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, திமுக நிர்வாகிகள் செந்தில்குமார், சுப்பிரமணி, பழனிசாமி, காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி, மக்கள் சிந்தனை பேரவை தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன், செய்தியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக கரோனா தொற்றால் உயிரிழந்த ராஜேந்திரனின் குடும்பத்துக்கு அரசின் நிவாரண உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் சு.முத்துசாமியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com