ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருப்பூரில் முள்புதரில் வீசப்பட்ட பெண் சிசு மீட்பு

திருப்பூரில் பிறந்து சில மணி நேரத்தில் முள்புதரில் வீசப்பட்ட பெண் சிசுயை அப்பகுதி பொதுமக்கள் வியாழக்கிழமை மீட்டனர்.

News image
திருப்பூர் சிவன் தியேட்டர் அருகில் உள்ள முள்புதரில் வீசப்பட்ட பெண் சிசுவை மீட்ட பொதுமக்கள்.
Updated On :29 ஜூலை 2021, 6:52 am

DIN


திருப்பூர்: திருப்பூரில் பிறந்து சில மணி நேரத்தில் முள்புதரில் வீசப்பட்ட பெண் சிசுயை அப்பகுதி பொதுமக்கள் வியாழக்கிழமை மீட்டனர்.

திருப்பூர் புதியபேருந்து நிலையத்தை அடுத்த சிவன் தியேட்டர் அருகில் உள்ள முள்புதரில் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் முள்புதரில் சென்று பார்த்தபோது துணியில் சுற்றி பெண் குழந்தை வீசப்பட்டிருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து, குழந்தையை மீட்ட பொதுமக்கள் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற மருத்துவமனை ஊழியர்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். 

இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், பிறந்து சில மணி நேரங்களேயான பெண் குழந்தை என்பது தெரியவந்தது. இதுகுறித்து சைல்டு ஹெல்ப் லைன் அதிகாரிகளும் குழந்தையின் பெற்றோர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.