புதுக்கோட்டை: பெட்ரோல், டீசல் விலை மற்றும் எரிவாயு உருளை விலைகளை மத்திய அரசு கட்டுப்படுத்தக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள பிஎல்ஏ பெட்ரோல் பங்க் எதிரில் காங்கிரஸ் கட்சியின் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவர் வி. முருகேசன் தலைமை வகித்தார்.
முன்னாள் மாநிலப் பொதுச்செயலர் வழக்குரைஞர் ஏ. சந்திரசேகரன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் துரை திவ்யநாதன், நகர காங்கிரஸ் தலைவர் ஏ.எம்.எஸ். இப்ராஹிம்பாபு உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
எரிபொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முயற்சிக்காத மத்திய பாஜக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.