வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ரமலான் பண்டிகை: வீட்டிலேயே தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்!

கரோனா பொது முடக்கம் காரணமாக ரமலான் பண்டிகையையொட்டி திருச்சி உய்யக்கொண்டான் திருமலையில் வெள்ளிக்கிழமை வீட்டிலேயே தொழுகை நடத்தி இஸ்லாமியர்கள் கொண்டாடினர். 

News image
வீட்டிலேயே தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
Updated On :14 மே 2021, 4:17 am

DIN

கரோனா பொது முடக்கம் காரணமாக ரமலான் பண்டிகையையொட்டி திருச்சி உய்யக்கொண்டான் திருமலையில் வெள்ளிக்கிழமை வீட்டிலேயே தொழுகை நடத்தி இஸ்லாமியர்கள் கொண்டாடினர். 

முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் முழுவதும் 30 நாள்களுக்கு நோன்பு கடைப்பிடிக்கப்படும். இதையடுத்து பிறை தெரிந்ததும் அடுத்த நாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். இந்த ஆண்டு ரமலான் நோன்பு ஏப்.14-ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் புதன்கிழமை பிறை தென்படவில்லை. வானில் பிறை தெரியாவிட்டாலும் நோன்பு நாளில் இருந்து 30-ஆவது நாள் ரம்ஜான் பண்டிகையாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் வெள்ளிக்கிழமை (மே 14) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாஹுத்தீன் முஹம்மத் அய்யூப் அறிவித்தார். 

Story image

இந்த நிலையில் கரோனா காலத்தில், ரமலான் பண்டிகையை பாதுகாப்பாகக் கொண்டாடுவது குறித்து அரசு வெளியிட்டுள்ள பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடித்து பெருநாளைக் கொண்டாட வேண்டும் என அரசு கூறியிருந்தது. 

Story image

வீட்டிலேயே குடும்பத்தினருடன் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்.

குறிப்பாக, சமூக இடைவெளி, முகக் கவசம், அடிக்கடி கைகளை சோப்பு, கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது, தேவையற்ற வகையில் வெளியே சுற்றித்திரிவதைத் தவிா்ப்பது, வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கட்டிப்பிடிப்பது, கை குலுக்குவது ஆகியவற்றைத் தவிா்ப்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், கரோனா பொது முடக்கம் காரணமாக ரமலான் பண்டிகையையொட்டி திருச்சி உய்யக்கொண்டான் திருமலையில் வெள்ளிக்கிழமை வீட்டிலேயே தொழுகை நடத்தி இஸ்லாமியர்கள் கொண்டாடினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.