கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

தேனி: 18ஆம் கால்வாய் பாலம் உடைந்து தண்ணீர் வீண்: விவசாயிகள் கவலை

தேனி மாவட்டம் க.புதுப்பட்டி அருகே 18 ஆம் கால்வாய் பாலம் உடைந்து தண்ணீர் வீணாகியதால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

News image

தேனி: 18ஆம் கால்வாய் பாலம் உடைந்து தண்ணீர் வீண்: விவசாயிகள் கவலை

Updated On :5 நவம்பர் 2021, 12:15 pm

DIN

தேனி மாவட்டம் க.புதுப்பட்டி அருகே 18 ஆம் கால்வாய் பாலம் உடைந்து தண்ணீர் வீணாகியதால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

கடந்த அக் .16 ல் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 18ம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கூடலூர், கம்பம், கோப்பை, தேவாரம் வழி சுத்தகங்கை ஓடை வரை கொண்டு செல்லப்படுகிறது. இதன்மூலம் உத்தமபாளையம் மற்றும் போடி தாலுகாவிலுள்ள 44 கண்மாய்களில் நிரம்பி, நிலத்தடிநீர் பெருகுவதோடு, நேரடியாக 4 ஆயிரத்து 614.25 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை க.புதுப்பட்டிக்கு மேற்கு திசையில் 18ஆம் கால்வாயில்அமைக்கப்பட்டிருந்த பாலம் உடைந்தது. இதனால் கோசந்திர ஓடையில் அளவிற்கு அதிகமாக தண்ணீர் சென்றதால் ஊத்துக்காடு - க.புதுப்பட்டி சாலை சேதமமைடந்தது.

Story image

இதேபோல் தேனி கம்பம் நெடுஞ்சாலையில் உள்ள கோசந்திர ஓடை பாலம் மண் அரிப்பால் சேதமடைந்தது. நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் பொதுப் பணித் துறையினர் சேதமடைந்த சாலை மற்றும் பாலம் பகுதிகளில் தற்காலிக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.