மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தை மாதத்தில் உறையூர் வெக்காளியம்மன் கோயில் குடமுழுக்கு?

திருச்சி உறையூரிலுள்ள அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோவிலில்  வரும் தை  மாதத்தில் குடமுழுக்கு நடத்தத் திட்டமிட்டு முழுவீச்சில் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

News image

உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜையுடன் வைக்கப்பட்ட ராஜநிலை.

Updated On :25 அக்டோபர் 2021, 7:56 am

திருச்சி உறையூரிலுள்ள அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயிலில்  வரும் தை  மாதத்தில் குடமுழுக்கு நடத்தத் திட்டமிட்டு முழுவீச்சில் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

கோயில் திருப்பணிகள் முழுவதும் நன்கொடையாளர்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

Story image

கோயிலில் கருவறை அம்மன் முன்னுள்ள அர்த்த மண்டபத்திற்கான ராஜநிலை வைக்கும் பணி, சிறப்பு பூஜைகளுடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Story image

கருவறைப் பகுதி திருப்பணிகள் காரணமாகக் கடந்த சில வாரங்களாக, பக்தர்களுக்கு மூலவர் தரிசனம் நிறுத்தப்பட்டு, உற்சவ அம்மன் தரிசனம் நடைபெற்றுவருகிறது.

Story image

1993-ல் இந்தக் கோயில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. தொடர்ந்து, இதற்கு முன்னர், 2006், மார்ச் 17 ஆம் நாள் கோயில் குடமுழுக்கு நடைபெற்றது. இந்தக்  குடமுழுக்கின்போது, ராஜகோபுரம், அம்பாள் மேற்கு மண்டபம், கிழக்கு மண்டபத் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

Story image

மீண்டும் குடமுழுக்கு நடத்தத் திட்டமிடப்பட்டு, ஆறு மாதங்களுக்கு முன்,  திருப்பணிகள்  தொடங்கப்பட்டு முனைப்பாக நடைபெற்று வருகின்றன.

Story image

திருப்பணிகளில் ஒன்றாக கருவறை முன்னுள்ள அர்த்த மண்டபத்தைக் கருங்கல்லில் அமைக்கத் திட்டமிடப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை  சிறப்பு பூஜையுடன் ராஜநிலை வைக்கப்பட்டது. கரோனா நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை காரணமாக மிகக் குறைவானவர்களே அனுமதிக்கப்பட்டனர்.

Story image

இந்தக் குடமுழுக்கையொட்டி, கோயிலின் மேற்கு, வடக்கு, தெற்கு பிரகாரங்களில் சாலகோபுரங்கள் அமைக்கப்படுகின்றன.

Story image

அம்மன் சன்னதி, ராஜகோபுரம் மற்றும் பிற பகுதிகள் அனைத்தும் புதிதாக  வண்ணம் தீட்டப்பட்டுக் குடமுழுக்கு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

Story image

முனைப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் திருப்பணிகள் நிறைவுறுவதைப் பொருத்து, தை மாதத்தில் கோயில் குடமுழுக்கு நடத்தத் திட்டமிடப்படுவதாகவும் ஒருவேளை தாமதமானால் வைகாசியில் குடமுழுக்கு நடைபெறும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.