தமிழகத்தில் புதிதாக 1,933 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் புதிதாக 1,933 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 1,933 பேருக்கு கரோனா தொற்று
தமிழகத்தில் புதிதாக 1,933 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் புதிதாக 1,933 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. மாநிலத்தில் புதிதாக 1,933 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 25,84,969 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 1,887 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 25,300,96 பேர் குணமடைந்துள்ளனர்.

34 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 34,462 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 20,411 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டங்கள்:

கோவையில் 236 பேரும், சென்னையில் 211 பேரும், ஈரோட்டில் 177 பேரும்,சேலத்தில் 120 பேரும் புதிதாக நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com