தமிழகத்தில் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உருமாறிய ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவலானது நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க | எழுத்தாளர் மு.முருகேஷுக்கு பால புரஸ்கார் சாகித்ய விருது அறிவிப்பு
இந்நிலையில் தமிழகத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் இரவு நேரப் பொதுமுடக்கம் விதிப்பது, பள்ளிகள், கல்லூரிகளின் வகுப்புகளை முறைப்படுத்துவது, புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
இந்தக் கூட்டத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் மற்றும் மருத்துவத்துறை உயரதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.