பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய பரமக்குடி மாணவன்: தூத்துக்குடி விமான நிலையத்தில் வரவேற்பு 

உக்ரைன் நாட்டில் இருந்து மத்திய அரசின் ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் நாடு திரும்பிய ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்த மாணவனுக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். 

News image

மாணவனுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்ற அமைச்சர் பீ.கீதாஜீவன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மற்றும் பாஜகவினர்.

Updated On :13 மார்ச் 2022, 5:28 am

DIN


உக்ரைன் நாட்டில் இருந்து மத்திய அரசின் ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் நாடு திரும்பிய ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்த மாணவனுக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். 

உக்ரைன்- ரஷியா இடையே போர் நடந்து வரும் சூழ்நிலையில் உக்ரைனில் மருத்துவ படிப்பை மேற்கொண்டு வரும் இந்திய மாணவர்கள் ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலமாக மீட்கப்பட்டு வருகின்றனர். இந்த திட்டத்தின் மூலமாக மாணவர்கள் எந்தவித கட்டணமின்றி இலவசமாக அழைத்து வரப்படுகின்றனர். 

கடந்த இரண்டு வார காலமாக ஏராளமான மாணவர்கள் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள சில மாணவர்களை அழைத்துவரும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று கொச்சின், ஜார்கண்ட் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் விமானம் மூலமாக தாயகம் அழைத்து வரப்பட்டனர். 

உக்ரைனில் தங்கி இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த கண்ணன்- அம்பிகா தம்பதியரின் மகன் சந்தோஷ் சென்னை வந்து அங்கிருந்து விமானம் மூலமாக தூத்துக்குடி வந்து இறங்கினர். 

மாணவனை தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பீ.கீதாஜீவன், தமிழக மீன் வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மற்றும் பாஜகவினர் மாணவனுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். மாணவன் குடும்பத்தினர் அவரை வரவேற்றனர். 

அதனைத் தொடர்ந்து மாணவன் சந்தோஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  
மத்திய அரசின் முயற்சியால் நாங்கள் மீட்கப்பட்டு நாடு திரும்பியுள்ளோம். உதவிய மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கு நன்றி என்று கூறினார். 

இதனிடையே ரஷிய நாட்டில் இருந்து மருத்துவ படிப்பை மேற்கொண்டு வரும் மாணவி பிருந்தா விமானம் மூலமாக தூத்துக்குடி வந்து இறங்கினார். அவரையும் அமைச்சர்கள் வரவேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.