ராமேசுவரம் மீனவர்கள் 15 பேர் சிறைபிடிப்பு: மீனவ சங்கம் கண்டனம்

ராமேசுவரம் மீனவர்கள் 15 பேர் இலங்கை கடற்பைடயினரால் சிறைபிடிக்கப்பட்டதற்கு மீனவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 
ராமேசுவரம் மீனவர்கள் 15 பேர் சிறைபிடிப்பு: மீனவ சங்கம் கண்டனம்

ராமேசுவரம் மீனவர்கள் 15 பேர் இலங்கை கடற்பைடயினரால் சிறைபிடிக்கப்பட்டதற்கு மீனவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று 539 விசைப்படகுகள் மீன்வளத்துறை அனுமதி பெற்று 3,500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவு கச்சத்தீவு நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக்கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குமல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். 

இதில் கிறிஸ்டோபர் மற்றும் அந்தோணி ராயப்பன் என்பவரது இரண்டு விசைப்படகுகள் அதில் இருந்து லியோ, ஜான்சன், எஸ்ரா, முருகன், நம்புமிலன், காளிமுத்து, வினோத், நம்புக்குமார் மற்றும் அந்தோணி ராயப்பன், அருணாச்சலம், பாண்டி, செந்தூர்பாண்டி, ரபிஸ்டன், மருது ஆகிய் 15 மீனவர்களை சிறைபிடித்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.

இதனைதொடர்ந்து, இலங்கை கடற்பகுதியில் மீன்பிடித்ததாக கூறி இரண்டு படகுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 15 மீனவர்களும் தலைமன்னார் நீரியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். மீனவர்கள் அனைவரும் மீதும் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர். 

ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்வதற்கு மீனவச் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துடன் படகுகள் மற்றும் மீனவர்களை உடனே விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com