தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

கான்பூர் நகர் அருகே ரயிலில் தீ! பெரும் புகை!!

உத்தரப் பிரதேசத்தில் காஸ்கஞ்ச் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒரு பெட்டியில் இன்று  வியாழக்கிழமை மாலையில் திடீரென தீப்பற்றியது.

News image

தீப்பற்றிய ரயில் பெட்டியைச் சூழ்ந்து நிற்கும் பயணிகள்

Updated On :23 நவம்பர் 2023, 8:16 pm IST

உத்தரப் பிரதேசத்தில் காஸ்கஞ்ச் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒரு பெட்டியில் இன்று  வியாழக்கிழமை மாலையில் திடீரென தீப்பற்றியது. நல்லவேளையாக யாருக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை.

கான்பூர் நகர் மாவட்டத்தில் உத்ரிபுர - பில்ஹர் ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று மாலை திடீரென பொதுப் பெட்டியொன்றில் திடீரென பெரும் புகை ஏற்பட்டது.

தீப்பற்றியதாகவும் வெறும் புகை மட்டுமே என்றும் மாறுபட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரயிலின் பிரேக் அமைப்பில் நேரிட்ட கோளாறு காரணமாக உராய்வு ஏற்பட்டதால் புகை தோன்றியதாக ரயில்வே வட்டாரங்கள்  தெரிவித்தன.

பிரேக் அமைப்பு சீர் செய்யப்பட்ட பின் ரயில் புறப்பட்டுச் சென்றதாகவும் தீப்பிடிக்கவில்லை என்றும் இந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.