ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

தமிழகம் வந்தார் ராகுல் காந்தி!

மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வந்தடைந்தார்.

News image
ராகுல் காந்தி
Updated On :12 ஏப்ரல் 2024, 10:16 am

DIN

இந்தியா கூட்டணி சாா்பில் பாளையங்கோட்டையில் இன்று (ஏப்.12)நடைபெறும் தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், ராகுல் காந்தி எம்.பி. பங்கேற்று, 8 வேட்பாளா்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்.

தமிழகத்தில் தேர்தல் நாள் நெருங்கியுள்ள நிலையில் இந்தப் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகா், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 8 தொகுதிகளில் இந்தியா கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து ராகுல் காந்தி தோ்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

தில்லியிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்த ராகுல் காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் பாளையங்கோட்டை தூய யோவான் பள்ளி திடலில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இறங்குகிறார்.

தொடா்ந்து, பொதுக்கூட்டம் நடைபெறும் பெல் திடலுக்கு கார் மூலம் வருகிறார். மாலை 4 மணி முதல் 4.45 மணி வரை இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.