தமிழகம் வந்தார் ராகுல் காந்தி!

மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வந்தடைந்தார்.
ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இந்தியா கூட்டணி சாா்பில் பாளையங்கோட்டையில் இன்று (ஏப்.12)நடைபெறும் தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், ராகுல் காந்தி எம்.பி. பங்கேற்று, 8 வேட்பாளா்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்.

தமிழகத்தில் தேர்தல் நாள் நெருங்கியுள்ள நிலையில் இந்தப் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகா், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 8 தொகுதிகளில் இந்தியா கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து ராகுல் காந்தி தோ்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

ராகுல் காந்தி
மதுரை மாநகரில் கோடை மழை!

தில்லியிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்த ராகுல் காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் பாளையங்கோட்டை தூய யோவான் பள்ளி திடலில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இறங்குகிறார்.

தொடா்ந்து, பொதுக்கூட்டம் நடைபெறும் பெல் திடலுக்கு கார் மூலம் வருகிறார். மாலை 4 மணி முதல் 4.45 மணி வரை இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com