உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் இருந்த 15 பேர் படுகாயமடைந்தனர்.
நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து சனிக்கிழமை காலை உளுந்தூர்பேட்டை அடுத்த ஆசனூர் பகுதியில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் படுகாயம் அடைந்த 15 பேரும் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
ஆம்னி பேருந்து விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.