சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

வங்கதேசத்தில் உள்ள 19000 இந்தியர்களில் 9000 பேர் மாணவர்கள்: ஜெய்சங்கர்

பெரும்பாலான மாணவர்கள் ஜூலை மாதமே இந்தியாவுக்கு திரும்பினர்.

News image

மத்திய வெளியுறவு விவகாரத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்.

Updated On :6 ஆகஸ்ட் 2024, 5:15 pm IST

வங்கதேசத்தில் உள்ள 19,000 இந்தியர்களில் 9,000 பேர் மாணவர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளதாகவும், டாக்காவில் உள்ள இந்திய மக்களிடம் நெருக்கமான தொடர்பில் இருப்பதாகவும் மத்திய வெளியுறவு விவகாரத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மக்களவையில் தகவல் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான மாணவர்கள் ஜூலை மாதமே இந்தியாவுக்கு திரும்பியதாகவும் ஜெய்சங்கர் மக்களவையில் தெரிவித்தார்.

வங்கதேசத்தில் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து வன்முறை நடைபெற்று வரும் நிலையில், ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ராணுவ விமானம் மூலம் நேற்று(ஆக. 5) இந்தியாவுக்கு வந்தார்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அறிக்கை தாக்கல் செய்து விளக்கம் அளித்தார்.

வங்கதேசம் விவகாரம் தொடர்பாக முதலில் மாநிலங்களவையில் விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், பின்னர் மக்களவையிலும் விளக்கம் அளித்தார்.

மக்களவையில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:

”வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குறுகிய கால அனுமதிக்கு பிறகு திங்கள்கிழமை மாலை இந்தியா வந்தார்.

ஆகஸ்ட் 5 ஆம் தேதி, ஊரடங்கு உத்தரவை மீறி டாக்காவில் போராட்டக்காரர்கள் குவிந்த நிலையில், பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனைக்குப் பிறகு ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்யும் முடிவை எடுத்ததாகத் தெரிகிறது.

வங்கதேசத்தில் வாழும் சிறுபான்மையினரையும் மத்திய அரசு தீவரமாகக் கண்காணித்து வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.