47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மீண்டும் தீவிர அரசியலுக்கு திரும்புகிறேன்: குஷ்பு

மகளிா் ஆணைய உறுப்பினா் பதவியிலிருந்து விலகியதை அடுத்து மீண்டும் தீவிர அரசியலுக்கு திரும்புகிறேன் என்று நடிகை குஷ்புசுந்தா் தெரிவித்துள்ளார்.

News image
குஷ்புசுந்தா்
Updated On :15 ஆகஸ்ட் 2024, 3:03 am

DIN

சென்னை: மகளிா் ஆணைய உறுப்பினா் பதவியிலிருந்து விலகியதை அடுத்து மீண்டும் தீவிர அரசியலுக்கு திரும்புகிறேன் என்று நடிகை குஷ்புசுந்தா் தெரிவித்துள்ளார்.

தேசிய மகளிா் ஆணைய உறுப்பினா் பதவியில் இருந்து நடிகை குஷ்பு விலகுவதாக ஜூன் 28-ஆம் தேதி அளித்த கடிதம் ஜூலை 30-ஆம் தேதி ஏற்றுக் கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் கடிதம் சமூக ஊடகங்களில் புதன்கிழமை பகிரப்பட்டன.

இதனை மகளிர் ஆணைய முன்னாள் தலைவர் ரேகா சர்மாவும் உறுதிப்படுத்தினாா்.

இதுதொடர்பாக குஷ்பு சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

மகளிர் ஆணைய உறுப்பினர் என்பது கட்டுப்பாடுகளுக்கு உள்பட்டது. அந்த பொறுப்பில் இருந்து ராஜிநாமா செய்துவிட்டதால் இப்போது என்னால் சுதந்திரமாக செயல்பட முடியும். இதனைத் தொடர்ந்து மீண்டும் தீவிர அரசியலுக்கு திரும்புகிறேன்.

பிரதமரின் தொலைநோக்கு திட்டங்களை முன்நெடுத்து செல்வதற்கான எனது பயணத்தில் வதந்தி பரப்புவோர் இனி இருக்கமாட்டார்கள்.

இது குறித்து சென்னையில் பாஜக கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை விளக்கமாகப் பேசுவதாக என குஷ்புசுந்தர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.