செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கத் தடை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வினாடிக்கு 28,000 கன அடியாக அதிகரித்துள்ளதால், பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் மீண்டும் தடை விதித்துள்ளது.

News image

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வினாடிக்கு 28,000 கன அடியாக அதிகரித்துள்ளதால், பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் மீண்டும் தடை விதித்துள்ளது.

Updated On :17 ஆகஸ்ட் 2024, 4:47 am

பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வினாடிக்கு 28,000 கன அடியாக அதிகரித்துள்ளதால், பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் மீண்டும் தடை விதித்துள்ளது.

கா்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களின் காவிரி நீா் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் கா்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகா் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு சுமாா் 19000 கன அடி வீதம் உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் கடந்த இரு தினங்களுக்கு மேலாக தமிழக காவிரி கரையோர நீா் பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி வினாடிக்கு 13,000 கன அடியாக இருந்த நீா்வரத்து சனிக்கிழமை காலை திடீரென அதிகரித்து விநாடிக்கு 28,000 கன அடியாக தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்குவதற்கு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தடை விதிக்கப்பட்ட நிலையில், பூட்டப்பட்டுள்ள ஒகேனக்கல் பரிசல் துறை.

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்குவதற்கு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தடை விதிக்கப்பட்ட நிலையில், பூட்டப்பட்டுள்ள ஒகேனக்கல் பரிசல் துறை.

கடந்த இரு தினங்களாக காவிரி ஆற்றின் நீா்வரத்து குறைந்து வந்ததால் சின்னாறு பரிசல் துறையில் இருந்து பிரதான அருவி வழியாக மணல்மேடு பகுதி வரை தா்மபுரி மாவட்ட நிா்வாகம் பரிசல் இயக்க அனுமதி அளித்திருந்தது.

இந்த நிலையில், காவிரி ஆற்றில் சனிக்கிழமை திடீரென நீா்வரத்து அதிகரித்ததால், தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்குவதற்கு சனிக்கிழமை முதல் தடை விதித்துள்ளாா்.

மேலும் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கு தொடா்ந்து 34 வது நாட்களாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கா்நாடக அணைகளில் இருந்து உபரி நீா் திறப்பு மற்றும் தமிழக காவிரி கரையோர நீா் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை உள்ளிட்ட காரணங்களால் காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரிப்பது, குறைவதுமாக உள்ளதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத்துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.