பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

காஸாவில் 20 பயங்கரவாதிகளை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது!

காஸாவில் இதுவரை சுமார் 20 பயங்கரவாதிகளை இஸ்ரேல் ராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

News image

காஸாவில் இஸ்ரேல் ராணுவம்

Updated On :18 ஆகஸ்ட் 2024, 4:09 pm IST

டெல் அவிவ்: காஸாவில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கைகளில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இதுவரை சுமார் 20 பயங்கரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

கான் யூனிஸ் மற்றும் டெய்ர் அல்-பாலா ஆகிய பகுதிகளில் அதன் படைகள் தொடர்ந்து செயல்படுவதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்குள் ஹமாஸ் படையினா் கடந்த அக். 7-ஆம் தேதி நுழைந்து தாக்குதல் நடத்தியதில் 1,139 போ் உயிரிழந்தனா். 200-க்கும் மேற்பட்டவா்கள் ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனா்.அதிலிருந்து காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் வான் வழியாகவும் கடல் மற்றும் தரைவழியாகவும் மிகக் கடுமையாக தாக்குதல் நடத்திவருகிறது.

இந்தப் போா் தொடங்கியதில் இருந்து 305 சதுர கி.மீ. (காஸா பகுதியின் சுமாா் 84 சதவீதப் பகுதி) பரப்பளவில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் உத்தரவிட்டது. பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதியிலும் அந்த நாடு அவ்வப்போது தாக்குதல் நடத்திவருகிறது.

கடந்த 10 மாதங்களுக்கும் மேல் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தைவிட அதிகமாக இருக்கலாம் என்றும், 92,401 போ் காயமடைந்துள்ளனா் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், காஸாவில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கைகளில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இதுவரை சுமார் 20-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை இஸ்ரேல் ராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.

இஸ்ரேல் விமானப்படை வெள்ளிக்கிழமை இஸ்ரேலின் நிரிம் பகுதி நோக்கி வீசப்பட்ட ராக்கெட்டுகள் இலக்குகளைத் தாக்கி அழித்தது. இந்த தாக்குதலில் கான் யூனிஸ் பகுதியில் லாஞ்சர்கள் அழிக்கப்பட்டன.

கடந்த நாள்களில், பயங்கரவாதிகளை ஒழித்து, அவர்களிடம் இருந்த கையெறி குண்டுகள் மற்றும் வெடிபொருட்கள் உட்பட ஏராளமான ஆயுதங்களை கண்டுபிடித்து இஸ்ரேல் படையினர் அழித்தனர்.

"உளவுத்துறை அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் இஸ்ரேல் படைகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன" என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.