பொத்தேரியில் போதைப்பொருள் நடமாட்டம்: 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது

செங்கல்பட்டு பொத்தேரியில் தனியார் மாணவர் விடுதிகளில் சனிக்கிழமை போலீஸார் நடத்திய சோதனையில் போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருள்கள் பறிமுதல் செய்தனர்.
பொத்தேரியில் தனியார் மாணவர் விடுதிகளில் சனிக்கிழமை அதிரடி சோதனையில் ஈடுபட்ட போலீசார்.
பொத்தேரியில் தனியார் மாணவர் விடுதிகளில் சனிக்கிழமை அதிரடி சோதனையில் ஈடுபட்ட போலீசார்.
Published on
Updated on
1 min read

செங்கல்பட்டு பொத்தேரியில் தனியார் மாணவர் விடுதிகளில் சனிக்கிழமை போலீஸார் நடத்திய சோதனையில் போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருள்கள் பறிமுதல் செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியை சுற்றியுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கியுள்ள விடுதிகளில், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் புழக்கம் பெருமளவில் இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

பொத்தேரியில் தனியார் மாணவர் விடுதிகளில் சனிக்கிழமை அதிரடி சோதனையில் ஈடுபட்ட போலீசார்.
ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களை பார்வையிட்டு முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

இதையடுத்து தனியார் கல்லூரியை சுற்றியுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிகளில் சனிக்கிழமை 500-க்கும் மேற்பட்ட போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையில், போதை மாத்திரைகள், காஞ்சாவுக்கு பயன்படுத்தக்கூடிய போதைப் பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மேலும் தனியார் கல்லூரியைச் சேர்ந்த சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாணவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com