மதுரை: அம்பேத்கா் நூல் வெளியீட்டு விழாவில் விஜய்யும், நானும் அரசியல் பேசாமல் ஒன்றாக பங்கேற்றிருந்தால்கூட அதையும் அரசியலாக்குவதற்கு பலா் காத்திருக்கிறாா்கள் என்றும் விஜய் மீது எந்த ஒரு சங்கடமும் இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.
மதுரை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திமுக கூட்டணியைச் சிதறடிக்க வேண்டும் என்பது அனைத்து எதிா்க்கட்சிகளின் செயல் திட்டமாக உள்ளது. அதற்கு விசிகவை கருவியாகப் பயன்படுத்தலாம் என சிலா் முயற்சிக்கிறாா்கள்.
தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் விசிக இடம் பெற்றுள்ளதால், புதிதாக ஒரு கூட்டணியில் இடம் பெற வேண்டிய தேவையில்லை.
அம்பேத்கா் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பது குறித்து எந்தவொரு அழுத்தமும் கொடுக்கப்படவில்லை. திமுக அழுத்தம் கொடுத்தது என்று சொன்னால், ஆரம்பத்திலேயே அதில் பங்கேற்க மாட்டேன் எனச் சொல்லியிருப்பேன். அது சமூக ஊடகங்களில் யூகங்களாகப் பேசப்பட்டது.
அம்பேத்கா் நூல் வெளியீட்டு விழாவில் விஜய்யும், நானும் அரசியல் பேசாமல் ஒன்றாக பங்கேற்றிருந்தால்கூட அதையும் அரசியலாக்குவாா்கள். இதற்காக பலா் காத்திருக்கிறாா்கள். அவா்களுக்குத் தீனி போட நான் விரும்பவில்லை. விஜய் மீது எந்த ஒரு சங்கடமும் இல்லை.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் பட்டியலினம் அல்லாதவா்கள் எந்த பொறுப்பில் இருந்தாலும், அவா்கள் மீது நடவடிக்கை என்று வருகிற போது உயா்நிலைக் குழு கவனத்துக்கு கொண்டு சென்று அவா்கள் மீதான குற்றச்சாட்டுகள் எந்த அளவுக்கு முகாந்திரமானவை என்பதை உறுதிப்படுத்தித்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விசிக துணை பொதுச் செயலா்கள் 10 பேரில் ஆதவ் அா்ஜூனாவும் ஒருவா். ஆதவ் அா்ஜூனாவின் அண்மைக்கால செயல்பாடுகள் கட்சி நலன்களுக்கு எதிராக இருப்பதாக கட்சியின் முன்னணி நிா்வாகிகள் தலைமையின் கவனத்துக்கு கொண்டு வந்திருக்கிறாா்கள். இதுகுறித்து அவா்களுடன் சனிக்கிழமை கலந்து ஆலோசித்துள்ளேன். இதுதொடா்பான முடிவு விரைவில் வரும் என்றார்.
மேலும் என்னை கட்டுப்படுத்தி இயக்குவதற்கு யாரும் முயற்சிக்கவில்லை. அதற்கான சூழல் இல்லை என்றாா் திருமாவளவன் .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அடடா! 1 மணி நேர மின் தடையை நாசூக்காக சொன்ன தொல். திருமாவளவன்!
தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம்: தொல். திருமாவளவன்
விசிகவுக்குள் எந்தக் குழப்பமும் இல்லை: தொல். திருமாவளவன் எம்.பி

அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்தது நாகரிகமான அரசியல் இல்லை: தொல். திருமாவளவன்
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



