வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

வெள்ளம், நிலச்சரிவால் 3 குழந்தைகள் உள்பட 10 பேர் பலி!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் 3 குழந்தைகள் உள்பட 10 பேர் பலியானதைப் பற்றி..

News image

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகானத்தில் ஏற்பட்டிருந்த நிலச்சரிவு.

Updated On :9 டிசம்பர் 2024, 3:01 pm IST

இந்தோனேசியா: ஜாவாத் தீவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியும் நிலச்சரிவில் புதைந்தும் 3 குழந்தைகள் உள்பட 10 பேர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் இடமாற்றபட்டுள்ள நிலையில், இருவரைக் காணவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஒருவார காலமாக இந்தோனேசியாவின் ஜாவாத் தீவில் ஏற்பட்டுவரும் சூறாவளிக்காற்றுடன்கூடிய கனமழையின் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டு அணைக்கட்டுகள் உடைந்தன. இதனால், மேற்கு ஜாவா மாகாணத்தின் சுகபூமி மாவட்டத்திலுள்ள 172 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவினால் நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணில் புதைந்ததுடன், பலரது வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளானது.

இதனால், அந்தக் கிராமங்களில் வாழ்ந்துவந்த 3,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த பெருவெள்ளத்தினால் 31 பாலங்கள் மற்றும் 81 சாலைகள் முழுவதுமாக சேதமடைந்ததுடன்; 1,332 ஏக்கர் பரப்பளவிலான நெல் வயல்களும் 1,170 வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. மேலும், 3,300 வீடுகள் உள்பட பிற கட்டிடங்களும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேரிடரில் கடுமையாக பாதிக்கப்பட்ட மூன்று கிராமங்களிலிருந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும் நிலச்சரிவில் புதைந்தும் உயிரிழந்த 10 பேர்களது உடல்கள் இன்று காலை மீட்புப் படையினரால் மீட்கப்பட்டது. மேலும், காணாமல் போன இரண்டு பேரைத் தேடிவருகின்றனர்.

வெள்ள நீரில் அடித்து வரப்பட்ட வாகனங்களும், சூறாவளிக் காற்றினால் வேரோடு மரங்கள் சாய்ந்தும், மண்சரிந்து விழுந்த பாறைகள் என அனைத்தும் சாலைகளில் சூழ்ந்து அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கோடிக்கணக்கான மக்கள் வாழும் 17,000 தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரையிலான பருவமழைக் காலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.

கடந்த மாதம் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் ஏற்பட்ட கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் 20 பேர் பலியானதுடன் இருவரைக் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.