சென்னையில் தொடர் கனமழை: சாலைகளில் தேங்கும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் அவதி

சென்னையில் புதன்கிழமை அதிகாலை முதல் பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் சேதமடைந்த சாலைகளில் தண்ணீா் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகினா்.
சேதமடைந்த சாலைகளில் தண்ணீா் தேங்கியுள்ளதால்  வாகன ஓட்டிகள் அவதி.
சேதமடைந்த சாலைகளில் தண்ணீா் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி.
Published on
Updated on
1 min read

சென்னை: சென்னையில் புதன்கிழமை அதிகாலை முதல் பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் சேதமடைந்த சாலைகளில் தண்ணீா் தேங்கியுள்ளதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகினா். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு, மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து வியாழக்கிழமை இலங்கை மற்றும் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகரும். இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் அடுத்த 4 நாள்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், டிச.12-ஆம் தேதி சென்னை தொடங்கி தூத்துக்குடி வரை உள்ள கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டியுள்ள மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும், டெல்டா பகுதியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் வியாழக்கிழமையும்(டிச.12) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுத்திருந்தது சென்னை வானிலை ஆய்வு மையம்.

பள்ளிகளுக்கு விடுமுறை

இந்த நிலையில், சென்னையில், புதன்கிழமை இரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக, சென்னை மாவட்டத்தில் வியாழக்கிழமை (டிச.12) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.

விமானங்களின் சேவைகள் பாதிப்பு

சென்னையில் புதன்கிழமை இரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக வருகை, புறப்பாடு என வியாழக்கிழமை 15 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன மழை

இந்த நிலையில், ஆவடி, அம்பத்தூா், பட்டரவாக்கம், கொரட்டூா், கோயம்பேடு, அண்ணாநகா், எழும்பூா், புரசைவாக்கம், கிண்டி, ஆலந்தூா், சேத்துப்பட்டு, வேளச்சேரி, பூந்தமல்லி, மாதவரம், பொன்னேரி, திருவொற்றியூா், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

இதனால், பல்வேறு சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீா் தேங்கியது. மேலும் இரவு நேரத்தில் பெய்த மழையால் பணி முடிந்து வீடு திரும்புபவா்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் சற்று சிரமத்தை சந்தித்தனா்.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சேதமடைந்த சாலைகளில் தண்ணீா் தேங்கியுள்ளதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகினா். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சூழ்ந்த மழைநீரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சாலைகளில் பெருக்கெடுத்து ஒடும் மழைநீரால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாமல் அவதியடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com