துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ஜாம்பியா அதிபருக்கு செய்வினை வைக்க முயன்ற இருவர் கைது!

ஜாம்பியா நாட்டு அதிபருக்கு செய்வினை வைக்க முயன்றதைப் பற்றி..

News image

ஜாம்பியா அதிபர் ஹகாயிண்டே ஹிச்சிலேமா - dotcom

Updated On :21 டிசம்பர் 2024, 4:48 pm IST

ஜாமிபியா நாட்டு அதிபருக்கு செய்வினை வைக்க முயன்ற இரண்டு சூனியக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

தெற்கு ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவின் மக்களில் பெரும்பாலானோருக்கு சூனியம் செய்வினை ஆகியவற்றின் மீது அதீத நம்பிக்கையும் அச்சமும் உள்ளது. இதனால் பலர் தங்களை சூனியக்காரர்களாக பாவித்து மக்களை ஏமாற்றி பணம் பறிப்பதுண்டு.

இந்நிலையில், அந்நாட்டு அதிபர் ஹகாயிண்டே ஹிச்சிலேமாவிற்கு செய்வினை வைக்க முயன்ற ஜாஸ்டென் மபுலீஸி கண்டுண்டே மற்றும் லியோனார்டு ஃபிரி ஆகிய இரண்டு சூனியக்காரர்கள் தலைநகர் லுசாக்காவில் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக கடந்த மாதம் கைது செய்யப்பட்ட அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினரான இம்மானுவேல் ஜெ. ஜெ. பண்டாவின் தம்பியான நெல்சன் அதிபர் ஹிச்சிலேமாவிற்கு செய்வினை வைக்க வேண்டுமெனவும் அதற்காக 73,000 டாலர் பணம் தருவதாகவும் கைது செய்யப்பட்ட இருவரை நாடியுள்ளார்.

சூனியக்காரர்கள் இருவரின் மீதும் சூனியத் தடைச் சட்டம், வனவிலங்கிற்கு தீங்கு விளைவித்தல் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை பணியமர்த்திய நெலசன் தலைமறைவாகியுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட இருவரிடமுமிருந்து மாந்திரீகப் பொருள்கள் மற்றும் சூனியத்துக்கு பயண்படுத்தப்பட்ட உயிருள்ள பச்சோந்தி ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.

ஜெ .ஜெ. பண்டா பக்கத்து நாடான ஜிம்பாபேவில் வழிப்பறியில் ஈடுப்பட்டதற்காக கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், சுயட்சை எம்.பி.யாக இருந்த ஜெ .ஜெ. பண்டா அதிபர் ஹிச்சிலேமாவிடம் தோல்வியுற்ற எதிர்கட்சி தலைவரும் ஜாம்பியாவின் முன்னாள் அதிபருமான எட்கார் லுங்குவிற்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஹகாயிண்டே ஹிச்சிலேமாவிற்கு ஆறாவது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறை அதிபரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.