தாஜ்புரா அருகே சாலை விபத்தில் காவல் உதவி ஆய்வாளர் பலி

ஆற்காடு ஆரணி சாலை தாஜ்புரா தனியார் பெட்ரோல் பங்க் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வாழைப்பந்தல் காவல் உதவி ஆய்வாளர் பலியானார்.
உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பலராமன்
உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பலராமன்
Published on
Updated on
1 min read

ஆற்காடு ஆரணி சாலை தாஜ்புரா தனியார் பெட்ரோல் பங்க் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வாழைப்பந்தல் காவல் உதவி ஆய்வாளர் பலராமன் பலியானார்.

வேலூர் மாவட்டம் மோத்தகல் கிராமத்தைச் சேர்ந்தவர் கே.பலராமன்(52). இவர் ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த வாழைப்பந்தல் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக உள்ளார்.

இவர் பணி முடிந்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் மோத்தகல் திரும்பிக் கொண்டிருந்தபோது ஆற்காடு ஆரணி சாலை தாஜ்புரா

கிராமம் தனியார் பெட்ரோல் பங்க் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தார்.

இதையடுத்து அருகில் இருந்தோர் அவரை ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆற்காடு கிராமிய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com