சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

பாமக பொதுக்குழு மேடையில் நடந்தது என்ன?

இளைஞரணி தலைவர் நியமனம் தொடர்பாக நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.

News image

பாமக பொதுக்குழு மேடையில் ராமதாஸ்-அன்புமணிக்கு இடையே வாக்குவாதம்.

Updated On :28 டிசம்பர் 2024, 4:22 pm IST

புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் 2025 புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் தொடர்பாக நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. இதனால் பாமக நிர்வாகிகள், தொண்டர்களிடையே பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

மேடையில் ராமதாஸ் - அன்புமணிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம்

ராமதாஸ்: பாமக இளைஞர் அணித் தலைவராக பரசுராமன் முகுந்தனை அறிவிக்கிறேன். அன்புமணிக்கு உதவியாக என்றார்.

அன்புமணி: எனக்கா...

ராமதாஸ்: ஆமாம்

அன்புமணி: வேண்டாம். கட்சியில் 4 மாதத்துக்கு முன்னாடி தான் வந்திருக்கிறார். இளைஞரணி அணித் தலைவர் பதவி என்றால். அவனுக்கு என்ன அனுபவம் இருக்கிறது. நல்ல திறமையான அனுபவசாலியை நியமிங்க என்றார்.

ராமதாஸ்: யாராக இருந்தாலும் நான் சொல்வதைதான் கேட்கணும். கேட்கவில்லை என்றால் யாரும் இந்த கட்சியில் இருக்க முடியாது. இது நான் உருவாக்கிய கட்சி. நான் சொல்வதை கேட்கவில்லை என்றால், யாரும் இந்த கட்சியில் இருக்க முடியாது.

அன்புமணி: அது சரி

ராமதாஸ்: என்னா, சரின்னா, போ அப்போ... மீண்டும் சொல்கிறேன். முகுந்தன்தான் இளைஞர் அணித் தலைவர். எல்லோரும் கைத்தட்டுங்கப்பா... என்றார் ராமதாஸ்.

அன்புமணி: குடும்பத்தில் இருந்து இன்னொன்ன போடு... குடும்பத்தில் இருந்து... என்ன சொல்றது என ஆவேசமாக மைக்கை தூக்கிப் போட்டார்.

இதையடுத்து கெளரவத் தலைவர். ஜி.கே. மணி மைக்கை எடுத்து நன்றி தெரிவிக்க முயன்றார்.

அப்போது அவரிடம் இருந்து மைக்கை வாங்கிய அன்புமணி சென்னை பனையூரில் எனக்கு புதிதாக ஒரு அலுவலகம் ஆரம்பித்து வைத்திருக்கிறேன். அங்கு வந்து என்னை எல்லோரும் பார்க்கலாம். 4446060628 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவித்தார்.

ராமதாஸ்: இன்னொரு அலுவலகம் திறந்துக்க. பரசுராமன் முகுந்தன் உனக்கு உதவியாக இருக்கப் போகிறார். இதை யாரும் மாற்ற முடியாது. உனக்கு விருப்பம் இல்லைனா... அவ்வளவுதான்... வேறு என்னா சொல்ல முடியும். முகுந்தன்தான் தலைவர். நான் சொல்வதைதான். அப்படி விருப்பம் இல்லாதவர்கள் என் பேச்சை கேட்காதவர்கள் விலகிக்கொள்ளுங்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.