சென்னை மாநகராட்சி: கனமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்! ஆக. 28-ல் மேட்டூர் அணை திறப்பு! முதல்வர் விஜய் வருகிறார்! ஏற்பாடுகள் முனைப்பு!13 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு! ‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிதமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

தென்கொரியா: விமான விபத்து பலி எண்ணிக்கை 120-ஆக உயர்வு!!

தென்கொரியா விமான விபத்து பலி எண்ணிக்கை உயர்வு.

Published On :29 டிசம்பர் 2024, 3:21 pm IST

தென்கொரியாவில் நடந்த விமான விபத்தின் பலி எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது என்று அந்நாட்டின் தேசிய தீயணைப்பு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

தாய்லாந்தின் பாங்காங்கில் இருந்து ஜெரு ஏர் பிளைட் 2216 என்ற விமானம், 175 பயனிகள் மற்றும் 6 விமான ஊழியர்களுடன் தென் கொரியாவுக்கு சென்ற நிலையில், முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து விலகி விமானம் விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் விமானத்தின் பின்பகுதி தீப்பற்றி எரிந்து பயங்கர புகை கிளம்பியது. விமானத்தில் இருந்து பயணிகள் வெளியேறுவதற்குள்ளாக விமானம் முழுவதும் தீப்பிடிக்க தொடங்கியது.

"இதுவரை இருவர் மீட்கப்பட்டுள்ளனர், 120 பேர் பலியாகியுள்ளனர்" என்று தென்கொரியாவின் தேசிய தீயணைப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் பறவைகள் மீது மோதல் மற்றும் வானிலை காரணங்களால் இவ்விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஒரு விமானப் பணிப்பெண் மற்றும் ஒரு பயணி இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தென் கொரியா தேசிய தீயணைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு 32 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வந்துள்ளனர்.

பயணிகளைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் எடுக்குமாறு தென்கொரியா அதிபர் இடைக்கால அழைப்பு விடுத்தார்.

விபத்துக்குள்ளான விமானத்தில் எஞ்சியிருந்த பயணிகள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.