தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

தலைவரின் கண் அசைவுக்காகத்தான் பொறுமை காக்கிறார்கள்: அமைச்சர் கீதா ஜீவன்

தலைவரின் கண் அசைவுக்காகத்தான், கட்சி தொண்டர்கள் பொறுமை காப்பதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :12 ஜூலை 2024, 3:41 pm IST

தலைவரின் கண் அசைவுக்காகத்தான், கட்சி தொண்டர்கள் பொறுமை காப்பதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியது:

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி தமிழ் வளர்ச்சி உள்பட மகளிர் வாழ்வாதாரம், திருநங்கைகள் வாழ்வாதாரம் என பல்வேறு வளர்ச்சிகளுக்காக பாடுபட்டவர். அத்தனை மதிப்புமிக்க ஒரு தலைவரை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொது மேடைகளில் தரம் குறைந்த வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவது கண்டிக்கத்தக்கது.

மேலும், அவரது கட்சி உறுப்பினர்களும் அவ்வாறு பேசி வருவதை திமுக சார்பில் கண்டிக்கிறோம். ஒரு கட்சித் தலைவருக்கு உள்ள எந்த தகுதியும் இல்லாமல் மாற்றுக் கட்சியினரை தவறான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

குறிப்பாக சீமான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக மாறி மாறி பச்சோந்தித்தனமாக பேசி வருகிறார்.

அவரது பேச்சில் ஒரு நிதானம் இல்லை. எனவே அவரின் மனநிலையை சோதிக்க வேண்டும். இளைஞர்களை தவறான திசைக்கு அழைத்துச் செல்கிறார்.

அவரது பேச்சு, தமிழகத்தின் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் உள்ளது.

தமிழகத்தில் குற்ற செயல்கள் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடந்துதான் வருகின்றது. திமுக ஆட்சியில் மட்டும்தான் நடந்து வருவதாக குறை சொல்வது நல்லது அல்ல.

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிச்சாமியும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் கருத்துரிமை பறிக்கப்படுவதாகக பேசுகின்றனர். சாட்டை துரைமுருகன் பேசியதை கேட்டு இருந்தால் அப்படி சொல்லமாட்டார்கள்.

இரண்டாவது இடத்தில் பாஜகவா, நாம் தமிழர் கட்சியா என்ற போட்டி நடைபெற்று வருகிறது. இதற்கு எடப்பாடி பழனிச்சாமி என்ன பதில் சொல்ல போகின்றார் என்று தெரியவில்லை. இதனாலையே மக்கள் தொடர்ந்து தமிழக மக்கள் அவரை நிராகரித்து வருகின்றனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.