நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இருசக்கர வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பலி

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை தென்கடப்பந்தாங்கல் பகுதியில் இருசக்கர வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பலியானார்.

News image

சாலை விபத்தில் பலியான சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பிச்சாண்டி (59).

Updated On :17 ஜூலை 2024, 6:40 am

Venkatesan

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை தென்கடப்பந்தாங்கல் பகுதியில் இருசக்கர வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பலியானார்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பிச்சாண்டி (59). இவர் தென்கடப்பந்தாங்கல் பகுதியில் இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை காலை சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக பின்னால் வந்த கண்டெய்னர் லாரி இவரது வாகனத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பிச்சாண்டி சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி பலியானார்.

இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மாவட்ட எஸ்.பி.கிரண் ஸ்ருதி மற்றும் வாலாஜாபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.