தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

ஓமனில் எண்ணெய் கப்பல் கடலில் கவிழ்ந்து மூழ்கியது: 13 இந்தியர்களின் நிலை?

13 இந்தியர்கள் மற்றும் இலங்கையைச் சேர்ந்த 3 பேர் என 16 பேர்களுடன் கொமரோஸ் நாட்டின் கொடியுடன் சென்ற எண்ணெய்க் கப்பல் ஓமன் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

News image

கோப்புப்படம்

Updated On :17 ஜூலை 2024, 11:29 am IST

மஸ்கட் (ஓமன்): 13 இந்தியர்கள் மற்றும் இலங்கையைச் சேர்ந்த 3 பேர் என 16 பேர்களுடன் கொமரோஸ் நாட்டின் கொடியுடன் சென்ற எண்ணெய்க் கப்பல் ஓமன் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக அந்நாட்டின் கடல்சார் பாதுகாப்பு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்த நிலையில், மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடல்சார் பாதுகாப்பு மையம் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டிருப்பதவாது: " 13 இந்தியர்கள் மற்றும் இலங்கையைச் சேர்ந்த 3 பேர் என 16 பேர்களுடன் கோமரோஸ் கொடியுடன் கூடிய ராஸ் மத்ரகாவில் இருந்து ஏமன் நாட்டின் துறைமுக நகரமான ஏடன் துறைமுகத்திற்கு சென்ற பிரஸ்டீஜ் பால்கன் என்ற எண்ணெய் கப்பல் தென்கிழக்கே 25 கடல் மைல்கள் தொலைவில் சென்றுகொண்டிருந்த போது ஓமானின் துகம் துறைமுகத்திற்கு அருகே கடலில் கவிழ்ந்தது. இதையடுத்து கப்பலில் இருந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த கப்பல் 117 மீட்டர் நீளமுள்ள எண்ணெய் தயாரிப்பு பொருள்களை ஏற்றிச் செல்லக்கூடிய வகையில் 2007 இல் தயாரிக்கப்பட்டது.

இத்தகைய சிறிய ரக எண்ணெய் கப்பல்கள் பொதுவாக குறுகிய பயணங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கப்பலில் இருந்த 13 இந்தியர்கள் மற்றும் இலங்கையைச் சேர்ந்த 3 பேர் என 16 பேரின் நிலை குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

முன்னதாக,கடந்த நவம்பர் 27 ஆம் தேதி கோமரோஸ் கொடியுடன் இந்திய பணியாளர்கள் உட்பட 14 பணியாளர்களுடன் எகிப்தின் டெக்ஹெய்லாவில் இருந்து இஸ்தான்புல்லுக்கு உப்பு ஏற்றிச் சென்று கொண்டிருந்த ராப்டார் சரக்குக் கப்பல், லெஸ்போஸின் தென்மேற்கே 4.5 கடல் மைல் (8.3 கிமீ) தொலைவில் சென்று கொண்டிருந்த போது அதிவேகக் காற்றின் காரணமாக கிரேக்கத்தின் லெஸ்போஸ் தீவின் கடலில் மூழ்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.