ஃபார்முலா கார் பந்தயம் நடத்த ஸ்பான்சர்ஷிப் வேண்டி நேர்முக கடிதம் எழுதியதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “இரண்டாண்டுகளுக்கு சென்னையில் ஃபார்முலா கார் பந்தயத்தை நடத்த மாட்டோம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதிப் பத்திரம் எழுதித் தந்துவிட்டு, கடந்த வாரம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் தமிழகத்தில் உள்ள கார் நிறுவனங்களுக்கு ஃபார்முலா கார் பந்தயத்தை சென்னை மாநகரில் நடத்துவதற்காக 'ஸ்பான்சர்ஷிப்' வேண்டி நேர்முகக் கடிதம் எழுதியுள்ளார்.
à®à®°à®£à¯à®à®¾à®£à¯à®à¯à®à®³à¯à®à¯à®à¯ à®à¯à®©à¯à®©à¯à®¯à®¿à®²à¯ à®à®ªà®¾à®°à¯à®®à¯à®²à®¾ à®à®¾à®°à¯ பநà¯à®¤à®¯à®¤à¯à®¤à¯ நà®à®¤à¯à®¤ மாà®à¯à®à¯à®®à¯ à®à®©à¯à®±à¯ à®à¯à®©à¯à®©à¯ à®à®¯à®°à¯à®¨à¯à®¤à®¿à®®à®©à¯à®±à®¤à¯à®¤à®¿à®²à¯ à®à®±à¯à®¤à®¿ பதà¯à®¤à®¿à®°à®®à¯ à®à®´à¯à®¤à®¿à®¤à¯ தநà¯à®¤à¯à®µà®¿à®à¯à®à¯, à®à®à®¨à¯à®¤ வாரம௠à®à®³à¯à®à®°à¯ நலன௠மறà¯à®±à¯à®®à¯ விளà¯à®¯à®¾à®à¯à®à¯à®¤à¯ தà¯à®±à¯ à®à¯à®à¯à®¤à®²à¯ தலà¯à®®à¯à®à¯à®à¯à®¯à®²à®¾à®³à®°à¯ தமிழà®à®¤à¯à®¤à®¿à®²à¯ à®à®³à¯à®³ à®à®¾à®°à¯ நிறà¯à®µà®©à®à¯à®à®³à¯à®à¯à®à¯ à®à®ªà®¾à®°à¯à®®à¯à®²à®¾ à®à®¾à®°à¯ பநà¯à®¤à®¯à®¤à¯à®¤à¯ à®à¯à®©à¯à®©à¯â¦
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) July 25, 2024
மேலும், விளையாட்டுத்துறை அனைத்து தொழிற்சாலைகளுக்கும், கார் பந்தயம் நடத்துவதற்குத் தேவையான நிதியினை பந்தய சாலை அபிவிருத்திக்காகவோ, உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காகவோ, குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான விளம்பரம் மூலமாகவோ ஸ்பான்சர் வழங்க கேட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
திமுக அரசின் இந்த நிர்பந்தத்தால் பல்வேறு தொழில் அமைப்புகள் கொதிப்படைந்துள்ளன. ஏற்கனவே தமிழகத்தில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் மூன்று முறை உயர்த்தப்பட்ட மின் கட்டண அதிகரிப்பால் சிறு, குறு தொழிற்சாலைகள், பஞ்சாலைகள், நூற்பாலைகள் உள்ளிட்ட பிற தொழில்கள் கடுமையாக பாதிப்படைந்து தொழிற்துறை முடங்கியுள்ள நிலையில், திமுக அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பார்முலா கார் பந்தயத்தை நடத்திட ஸ்பான்சர்ஷிப் வழங்க வலியுறுத்துவது கண்டிக்கத்தக்கது”எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உள்ளாட்சித் தோ்தலை மனதில் களப்பணியாற்றுங்கள்: கட்சி நிா்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்

அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்

பொன்னமராவதி ஒன்றிய அதிமுக புதிய நிா்வாகிகள் நியமனம்






