கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

இஸ்ரேலியர்கள் நுழையத் தடை விதிக்கும் மாலத்தீவு!

இஸ்ரேலிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு மாலத்தீவுக்குள் நுழையத் தடை விதிக்க இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

News image

மாலத்தீவு அதிபர் முகமது முயிசு

Updated On :3 ஜூன் 2024, 6:56 am

DIN

மாலத்தீவு அரசாங்கம் இஸ்ரேலியர்களுக்கு நாட்டுக்குள் வர தடை செய்ய முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சுற்றுலாவுக்குப் பெயர் பெற்ற நாடான மாலத்தீவில் இஸ்ரேலியர்கள் நுழையத் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காஸாவில் நடக்கும் போரால் இஸ்ரேலின் மீது இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் மாலத்தீவின் மக்கள் அதிருப்தியில் இருப்பதாகத் கூறப்படுகிறது.

கடந்தாண்டு அக்டோபர் 7 முதல் இஸ்ரேல் நடத்தியத் தாக்குதலில் 36,439 பாலஸ்தீனர்கள் இதுவரை கொல்லப்பட்டதாகவும், 82,627 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், எதிர்க்கட்சிகளும், கூட்டணிக் கட்சிகளும் அதிபர் முகமது முயிசுவுக்கு அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிபர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த உள்துறை அமைச்சர் அலி இஹுசன்,”இஸ்ரேலியக் கடவுச்சீட்டைப் (பாஸ்போர்ட்) பயன்படுத்தி மாலத்தீவுக்கு வருபவர்களைத் தடுக்க விரைவில் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை முடிவெடுத்துள்ளது” என்று அறிவித்தார்.

தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி பாலஸ்தீன் விவகாரத்தில் மாலத்தீவு அமைச்சரவை சார்பில் எடுக்கப்பட்ட முக்கியமான 4 தீர்மானங்கள்:

1. பாலஸ்தீனத்துக்கு மாலத்தீவு மூலம் தேவைப்படும் உதவிகள் குறித்து விசாரிக்க சிறப்புத் தூதுவரை நியமித்தல்.

2. ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி நிறுவனம் மூலம் கிழக்குப் பகுதியிலுள்ள பாலஸ்தீன அகதிகளுக்கு நிதி சேகரித்தல்.

3. ’பாலஸ்தீனுக்கு ஆதரவளிக்கும் மாலத்தீவு மக்கள்’ என்ற தலைப்பில் நாடு முழுவதும் பேரணி நடத்துதல்.

4. மற்ற இஸ்லாமிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பாலஸ்தீன் பிரச்னைக்குத் தீர்வு காணுதல்.

மாலத்தீவுக்கு ஆண்டுதோறும் 10 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இதில் இஸ்ரேலிலிருந்து 15,000 பயணிகள் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.