கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள்.. சிபிஐ விசாரணை தேவை - டிடிவி தினகரன்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று அமமுக பொதுச் செயலர் டிடிவி. தினகரன் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள்.. சிபிஐ விசாரணை தேவை - டிடிவி தினகரன்
Published on
Updated on
1 min read

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்த டிடிவி தினகரன், பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 57 பேர் உயிரிழந்த நிலையில், இன்னும் 20 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தமாக 160 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் குணமடைய வேண்டுகிறேன்.

இந்த உயிரிழப்பு சம்பவம் அரசின் தோல்வியைக் காட்டுகிறது. இந்த சம்பவத்துக்கு ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பது உறுதியாகத் தெரிகிறது.

கள்ளச்சாராயம் காவல் நிலையத்துக்கு பின்புறத்திலுள்ள இடத்தில் தான் நடைபெற்றுள்ளது. இதனை உளவுத்துறை, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வில்லையா? முதல்வர் தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? இல்லை கண்டும் காணாமல் விட்டு விட்டாரா?

ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள், இவர்களுடன் இருப்பவர்கள் தான் 57 பேரின் உயிரிழப்புக்கு காரணம். காவல் துறையினரை செயல்பட விடாமல் தடுத்து நிறுத்தியவர்கள் திமுகவினர்தான்.

எனவே, தமிழக முதல்வர் ஏதாவது காரணங்களைக் கூறாமல், இனியாவது கள்ளச் சாராய உயிரிழப்புகள் நடைபெறாத வகையில் ஆட்சியை நடத்த வேண்டும்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள்.. சிபிஐ விசாரணை தேவை - டிடிவி தினகரன்
உலக அளவில் மாணவர்களுக்கு உகந்த நகரங்கள்: சென்னை முன்னேற்றம்!

தமிழக முதல்வரும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரும் இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று தவறை ஒத்துக் கொள்ள வேண்டும்.

காவல் துறையும், மாவட்ட நிர்வாகம் தடையில்லாமல் செயல்பட அனுமதிக்க வேண்டும்.

இந்த சம்பவத்துக்கான அமைக்கப்பட்ட ஆணையத்தால் எந்த பயனும் இல்லை. ஏற்கெனவே தூத்துக்குடி சம்பவத்துக்காக அடைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கை மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதுபோன்றுதான் இந்த ஆணையமும் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்.

அதன் பின்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. உண்மை தெரிய வர வேண்டும் எனில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். அப்போதுதான் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். உடந்தையாக இருந்தவர்களும் தண்டிக்கப்படுவர்.

ரூ.10 லட்சம் நிவாரண உதவித் தொகையை முதல்வர் அறிவித்திருந்தாலும், அவரது மனதில் ஏற்பட்ட அச்சம் காரணமாகத்தான் அவரால் இங்கு வர முடியவில்லை.

இந்த சம்பவத்தில் முதல்வர் என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்று பார்ப்போம். அதன் பின்னர் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வோம் என்றார் டிடிவி தினகரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com