தூத்துக்குடி: தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற காது மற்றும் பேச்சு குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான மருத்துவ முகாமினை மக்களை உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளரிடம் கூறியது: தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் காது மற்றும் பேச்சு குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 10 ஆம் தேதி திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் காது மற்றும் பேச்சு குறைபாடு உள்ள குழந்தைகளை பெற்றோர் அழைத்துச் சென்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தேர்தல் வருகிறது என்பதற்காக பிரதமர் மோடி அடிக்கடி தமிழகத்திற்கு வருகிறார். சர்வதேச மகளிர் நாளில் பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செய்திருக்கலாம். ஆனால், பெண்கள் சமையலறையிலேயே இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிலிண்டர் விலையை குறைத்துள்ளார் என்று கனிமொழி தெரிவித்தார்.