ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற காது மற்றும் பேச்சு குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான மருத்துவ முகாமினை மக்களை உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளரிடம் கூறியது: தூத்துக்குடி வ‌.உ.சிதம்பரம் கல்லூரியில் காது மற்றும் பேச்சு குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 10 ஆம் தேதி திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் காது மற்றும் பேச்சு குறைபாடு உள்ள குழந்தைகளை பெற்றோர் அழைத்துச் சென்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தேர்தல் வருகிறது என்பதற்காக பிரதமர் மோடி அடிக்கடி தமிழகத்திற்கு வருகிறார். சர்வதேச மகளிர் நாளில் பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செய்திருக்கலாம்.‌ ஆனால், பெண்கள் சமையலறையிலேயே இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிலிண்டர் விலையை குறைத்துள்ளார் என்று கனிமொழி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.