பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று (மாா்ச். 17) கடற்கரை- தாம்பரம் இடையே 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
புறநகர் ரயில்கள் ரத்து எதிரொலியாக பயணிகள் வசதிக்காக சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே ஞாயிற்றுக்கிழமை கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அதன்படி, பிராட்வேயிலிருந்து அண்ணா சாலை வழியாக தாம்பரம் வரை கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
பயணிகள் சிரமமின்றி பயணிக்க ஏதுவாக இன்று காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.