புறநகர் ரயில்கள் ரத்து: கூடுதல் பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் இயக்கம்

புறநகர் ரயில்கள் ரத்து எதிரொலியாக கூடுதல் பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று (மாா்ச். 17) கடற்கரை- தாம்பரம் இடையே 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

புறநகர் ரயில்கள் ரத்து எதிரொலியாக பயணிகள் வசதிக்காக சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே ஞாயிற்றுக்கிழமை கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

கோப்புப்படம்
மார்ச் 17-ல் 44 மின்சார ரயில்கள் ரத்து!

அதன்படி, பிராட்வேயிலிருந்து அண்ணா சாலை வழியாக தாம்பரம் வரை கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

பயணிகள் சிரமமின்றி பயணிக்க ஏதுவாக இன்று காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com