தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

கனமழை மற்றும் ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் உதகை மலை ரயில்கள் சேவை திங்கள்கிழமையும் (மே 20) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

News image

நீலகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை பெய்த மழையில் சாலையில ஓடும் மழை நீரில் மிதந்து வரும் வாகனங்கள்.

Updated On :19 மே 2024, 10:08 pm IST

கனமழை மற்றும் ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் உதகை மலை ரயில்கள் சேவை திங்கள்கிழமையும் (மே 20) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு வாரங்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் கடந்த 2 வாரகமாக கனமழை பெய்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை 3 நாள்களுக்கு மிக கனமழை பெய்யும். மேலும், ஆரஞ்சு அலா்ட் எச்சரிக்கையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு பலத்த மழை பெய்ததால் மலை ரயில் பாதையில் பாறைகள் மற்றும் மரங்கள் விழுந்ததால் தண்டவாளங்கள் சேதம் அடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி:

நீலகிரி மலை ரயிலின் கல்லாா் - ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே மண் சரிவு மற்றும் ரயில் பாதையில் பாறைகள் விழுந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏற்கனவே கடந்த மே 18,19-ஆகிய தேதிகளில் மேட்டுப்பாளையம் - உதகை இடையே இயங்கும் மலை ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில், திங்கள்கிழமை (மே 20) வரை ரயில்கள் சேவை ரத்து நீடிக்கும்.

ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு முன்பதிவு செய்தவா்களுக்கு பயணச்சீட்டின் கட்டணத் தொகை முழுவதுமாக திரும்ப வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.