இந்திய அணிக்கு வெவ்வேறு பயிற்சியாளர்கள் தேவையில்லை: இங்கிலாந்து முன்னாள் வீரர்

இந்திய அணிக்கு வெவ்வேறு பயிற்சியாளர்கள் தேவையில்லையென இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி வீரர்கள் (கோப்புப்படம்)
இந்திய அணி வீரர்கள் (கோப்புப்படம்)

இந்திய அணிக்கு வெவ்வேறு பயிற்சியாளர்கள் தேவையில்லையென இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கிரீம் ஸ்வான் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் வருகிற டி20 உலகக் கோப்பையுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அண்மையில் அறிவித்தது. விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி நாள் மே 27 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய அணி வீரர்கள் (கோப்புப்படம்)
இந்தியத் தலைமைப் பயிற்சியாளர் பதவி: நிராகரித்த ரிக்கி பாண்டிங்!

இந்த நிலையில், இந்திய அணிக்கு வெவ்வேறு பயிற்சியாளர்கள் தேவையில்லையென இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கிரீம் ஸ்வான் தெரிவித்துள்ளார்.

கிரீம் ஸ்வான் (கோப்புப்படம்)
கிரீம் ஸ்வான் (கோப்புப்படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியா போன்ற நாட்டுக்கு குறுகிய வடிவிலான போட்டிகளுக்கு மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு என வெவ்வேறு பயிற்சியாளர்கள் தேவையில்லை என நினைக்கிறேன். ஏனென்றால், ஐபிஎல் தொடரை தவிர்த்து இந்திய வீரர்கள் உலகெங்கிலும் நடைபெறும் வேறு எந்த டி20 தொடரிலும் விளையாடுவதில்லை. அவர்கள் கிட்டத்தட்ட ஆண்டு முழுவதும் இந்தியாவிலேயே இருக்கிறார்கள். அதனால், இந்திய அணிக்கு வெவ்வேறு பயிற்சியாளர்கள் தேவையில்லை என நினைக்கிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com