தொட்டபெட்டா சிகரத்துக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி!

உதகையில் உள்ள தொட்டபெட்டா மலைச் சிகரத்துக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை(மே 23) முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

உதகையில் உள்ள தொட்டபெட்டா மலைச் சிகரத்துக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை(மே 23) முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் தொட்டபெட்டா ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குகின்ற காரணத்தினால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உதகை அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலைச் சிகரம் ஆகிய இடங்களுக்கு செல்கின்றனர்.

கோப்புப்படம்
இலங்கை தமிழ் மாணவிக்கு கல்லூரியில் படிக்க சேர்க்கை ஆணை: முதல்வர் வழங்கினார்

இந்த நிலையில், உதகையில் உள்ள தொட்டபெட்டா சிகரம் செல்வதற்கு மே 16 முதல் 7 நாள்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பாஸ்டேக் சோதனைச் சாவடியை மாற்றியமைக்கும் பணி நடைபெறுவதால் மே 22 ஆம் தேதி வரை தொட்டபெட்டா சிகரம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பாஸ்டேக் சோதனைச் சாவடியை மாற்றியமைக்கும் பணி 50 சதவீதம் நிறைவடைந்ததால் வியாழக்கிழமை (மே 23) முதல் தொட்டபெட்டா மலைச் சிகரத்துக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு வனத்துறை அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com