சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆத்தூர் அருகே கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பலி

ஆத்தூர் அருகே நண்பர்களோடு ஏறிப் பகுதிக்குச் சென்று புகைப்படம் எடுக்க முயன்ற கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

News image

திருச்சிற்றம்பலம் சிவா

Updated On :3 நவம்பர் 2024, 11:49 am

DIN

ஆத்தூர் அருகே நண்பர்களோடு ஏறிப் பகுதிக்குச் சென்று புகைப்படம் எடுக்க முயன்ற கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வடக்கு காடு பகுதியில் அய்யனார் கோவில் ஏரி அமைந்துள்ளது. ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அய்யனார் கோவில் ஏரி நிரம்பி உள்ளது.

மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் சூரியமூர்த்தி மகன் திருச்சிற்றம்பலம் சிவா (18). இவர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார்.

இந்தநிலையில், நண்பர்கள் சபரீஷ்வரன், மனோஜ் ஆகியோருடன் வடக்கு காடு பகுதியில் அய்யனார் கோவில் ஏரியில் ஞாயிற்றுக்கிழமை திருச்சிற்றம்பலம் சிவா குளிக்கச் சென்றுள்ளார்.

ஏரியின் நீர் பகுதியில் இறங்கி திருச்சிற்றம்பலம் சிவா புகைப்படம் எடுக்குமாறு நண்பர்களிடம் சொல்லி உள்ளார். அப்போது அதிக அளவில் ஆழம் இருந்ததால் திடீரென சிவா நீருக்குள் மூழ்கியுள்ளார்.

சிவாக்கு நீச்சல் தெரியாது எனக் கூறப்படும் நிலையில், அவா் ஆழமான பகுதியில் மூழ்கியுள்ளாா்.

நண்பா்கள் காப்பாற்ற முயன்றும் முடியாததால் அருகில் இருந்தவர்கள் ஆத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் தேடும் பணியில் ஈடுபட்டனா். சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின் கல்லூரி மாணவர் திருச்சிற்றம்பலம் சிவா உடலை சடலமாக மீட்டனர். உடலை கைப்பற்றிய ஆத்தூர் நகர போலீசார், உடற்கூறாய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.